இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Friday, September 3, 2010

இன்னுமோர் பந்தம் ! இனியிவள் உன்னுயிர் சொந்தம் !

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, September 03, 2010 No comments

இதோ... காலமெல்லாம் காதல் மொழி பேச இன்னுமோர் பந்தம் ! இனியிவள் உன்னுயிர் சொந்தம் ! தென்றல் தேடும் தேனிலவுதனை தனக்கேயென தனக்குள் மறைக்கும் வான்முகில் தனைப்போல, வண்ணமயில் இவளை உனக்குள்ளே ஒளித்துகொள் ! நானிலம் போற்றும் உம் நல்வாழ்வு கண்டு.. நற்றமிழ் புலவர்கள் இன்னுமோர் காப்பியம் இயற்றட்டும் இக்கணம் ! இவ்விணைபோல் இல்லையென கூறட்டும் புது இலக்கணம் ...  [ Read More ]

Saturday, April 3, 2010

ஒற்றை பனித்துளி..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Saturday, April 03, 2010 2 comments

உருகிய பின்னும் இன்னும் உதிராமல் உனக்காய் காத்திருக்கும் ஒற்றை பனித்துளி...  [ Read More ]

Sunday, March 28, 2010

இறந்து விட்டேன் அழ யாருமில்லை..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 28, 2010 4 comments

 உயிரும் இல்லை - ஆனால்ஒருத்தரும் அழவுமில்லை இங்கு என்னைத் தவிர..!இத்தனைக்கும் நான் இறந்து விட்டேன்உன்னை பிரிந்த மறு கணமே..!  கண்ணீர் கொண்டு நித்தம் அழிக்க பார்க்கிறேன்.. ஆனால் ஓயாமல் அடம் பிடிக்கிறதுகண்ணீரை உண்டு உயிர் வாழும்  உந்தன் நினைவுகள்..! இன்றாவது மணம் கமழச் சொல்லேன் நீ கடைசியாய் பறித்த மலரிடம்...!!...  [ Read More ]

தண்ணீரில் விழுந்த தாமரை..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 28, 2010 6 comments

தண்ணீரில் தவறி விழுந்ததாமரை இதழாய் நித்தம் தவிக்கிறேன் ஒட்டி உறவாடவும் இல்லை..விட்டு விலகவும் இல்லை..முட்டி மோதுகிறேன், உன் நினைவுகளோடு.....  [ Read More ]

மௌனமாய் கொலுசு..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 28, 2010 4 comments

  கொலுசும்..கொஞ்ச நேரம் மௌனமாய் ரசிக்கிறது நீ சிணுங்குவதை..! தாமரையும்..நீச்சலை மறந்து தண்ணீரில் தத்தளித்து மூழ்கப் பார்க்கிறது நீ கடக்கும் போது..!  பிரம்மனும்.. புன்னகைக்கு புது விலாசத்தைஉன் இதழ் அசைவில் அஞ்சலாய்அனுப்பி உள்ளான் போலும் ...  [ Read More ]

Tuesday, March 23, 2010

இதய தேர்தல்..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, March 23, 2010 3 comments

  என் உயிரின் உயிரான வாக்காளப் பெரும(க்)களே..உங்கள் இதய தொகுதியில் போட்டியிடும் எனக்கு உங்களின்...இதய வா(ழ்)க்கை அளிக்குமாறு உங்கள் இருத(ய)(ட)ம்தொட்டு கேட்டுக்  கொள்கிறேன்....  [ Read More ]

Sunday, March 14, 2010

விழியோரமாய் விசித்திர வீரன்...!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 14, 2010 3 comments

உன்னை படைத்த ஆண்டவனை விட நான் அதிகமாய் வியப்பது..உந்தன் இமைகளை தான்..!!பிறகென்ன கொஞ்சம் கூட பயமில்லாமல், அட கொஞ்சமும் சலனமும் இன்றி...எவ்வளவு சகஜமாய்...விழிகளோடு ஒட்டி உறவாடுகிறது .....  [ Read More ]

Sunday, March 7, 2010

எங்கள் வீட்டு திருமணம்...... !!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 07, 2010 4 comments

புதுமணம் புரியும் பூமகளே, உன் ஓர விழியோரம் ஒதுங்கும் குறுநகைக்கு விலங்கிட இனி வேலையில்லை..!! கெட்டி மேளம் முழங்கும் நல்வேளை, பூவேலியிட்டு மறைத்த மனதை நாளை பொன்தாலியிட்டு பறைசாற்று ..!! உனக்காய் பிறந்த முறை மாமன், உறைசேரும் எங்கள் குலமகளே..வள்ளுவன் வகுத்த வழியில் நல்லறம் பேணி இல்லறம் சிறக்க செய்வாயாக......  [ Read More ]

Monday, February 15, 2010

நீ இல்லாத குறை..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Monday, February 15, 2010 1 comment

தனிமை தேடி நான் தனித்து நிற்கையில் ஆளே இல்லாத அறை... அங்கேயும் நிறைந்தே  நிற்கிறது.. நீ இல்லாத குறை..!! நீ செல்லமாய் தான் கிள்ளி சென்றாய்... எனக்கோ மொத்தமாய் இழந்த இதயம் போல் வலிக்கிறது நாளை வரை வரமாட்டாய் எனும் போது..! ...  [ Read More ]

Sunday, February 14, 2010

காதலா..!! காமமா..??

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, February 14, 2010 2 comments

காரிருள் அள்ளிச் சூடிய காலை கதிரவனின்  கன்னிப் பார்வையில் கண் மலர்ந்து தனை மறந்து உருகி... உயிர்விடும் பனித்துளி....! காதலா..!! காமமா....  [ Read More ]

கனவில் கதவை திறக்கிறேன் ..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, February 14, 2010 2 comments

கண்ணே.. நீ பார்க்கும் போது நான் குருடனாகிறேன்..!நீ பேசும் போதுநான் ஊமையாகிறேன்..!நீ சிரிக்கும் போதுநான் கண் சிமிட்டவும் கூட மறந்து விடுகிறேன்..!அட...நீ கனவில் வந்தால் கூட கதவை திறக்கிறேன் இதயத்தில் இடமளிக்க...  [ Read More ]

Thursday, February 11, 2010

இருவருக்குமாய் ஒரு கூட்டணி..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, February 11, 2010 2 comments

அன்பே.. யார் யாரோ கூட்டணி  அமைக்கிறார்கள் நாமும் அமைத்தால் என்ன..??வா நாமும் அமைப்போம்.... இனிதாய்..வாழ்க்கை தேர்தலில் இதய தொகுதியில்காதல் சின்னத்தில் போட்டியிடுவோம் நான் மட்டுமே வேட்பாளர்..!!.இன்னுமா சந்தேகம்....??நீ மட்டுமே வாக்காளர்....  [ Read More ]

படையெடு இன்றே..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, February 11, 2010 1 comment

வானவில் கொடி ஏந்தும் வானப்படையின் மேகப் போர்வீரனே..படையெடு இன்றே பஞ்சத்தின் பாதக ஆட்சி அகற்ற..! ஆயிரம் படை கண்டேன் - அவர்தம் ஆயிரம் கொடி கண்டேன் எவரதும் இல்லை உன்போல் ஏழு வண்ணத்தில்..!! உயிர் உறையும் போர்க்களம் ஆயிரம் கண்டதுண்டு..!பயிர் விளையும் போர்க்களம்  உன் களம் மட்டுமே..! படையெடு இன்றே பஞ்சத்தின் பாதக ஆட்சி அகற்ற..! ...  [ Read More ]

மனம் மலரும் மண விழா..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, February 11, 2010 1 comment

இன்றே காதல் கொண்டு வண்ணமாக்கிடுங்கள்  பாசப் புள்ளியில்நேசக் கோடிட்ட புது வாழ்க்கை கோலத்தை...!! வண்ண பூக்களின் வாசனையோடு வண்ணத்து பூச்சியின் யோசனையோடுவான்முகில் தோரண வழியில்...... தொடரும் இந்த இனிய பயணம்இருவர் பயணம் ஆயினும் இட்டு செல்லுங்கள் ஒருவர் காலடியை மட்டும்...!!...  [ Read More ]

காதல்..! ஒரு கனவு..!?

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, February 11, 2010 1 comment

காதல் ஒரு கனவு என்கிறார்களே..?அட.. ஆமாம் ..!கனவுகள் என்ன கதவை தட்டி விட்டா வருகிறது ..?காதலும் அப்படித் தானே வருகிறது..! அப்போ அவர்கள் சொல்வது உண்மை தான்.. ச்சே... ச்சே.. அப்படியெல்லாம் இருக்காது... அட....கண்களின் உறக்கத்தில் பிறந்துமறைவதன்றோ கனவு ..!ஆனால்கண்களின் நெருக்கத்தில் நுழைந்து உறைவதன்றோ காதல்..! அட.. போங்கப்பா...காதலும் கனவும் வேறு வேறுதான்...  [ Read More ]

Tuesday, February 2, 2010

நிலவுக்கு நல்ல நேரம் ..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, February 02, 2010 2 comments

அன்று ஒரு நாள் ..என்னவள் அமாவாசை நாளில்நிலவை தேடி கொண்டிருந்தாள்..!நல்ல வேளை நிலவுக்கு அன்று நல்ல நேரம் போலும்..!இல்லையேல்.... அய்யகோ ..அவளின் காந்தப் பார்வையில் சாந்தமான அந்த.. வெண்மதியும்வெம்மையாயிருக்கும்..!!...  [ Read More ]

உழவர் பெருமை...!! (2009)

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, February 02, 2010 2 comments

வானம் பார்த்த எம் பூமியின் மானம் காத்த எம் உழவா..!வழி தவறிய மேகங்கள்வழியில் தொலைத்த சில துளிகளோடுஉன் துளி தந்து..உதிரத்தையன்றோ உரமாக்கினாய்..!ஆயிரமாயிரம் நெல் மணிகளைஉருவாக்கி கருவாக்கிய தாயல்லவா நீ..!உன் உழைப்பிற்கு தலை வணங்கும்..உன்னினம் என்பதால் மார் தூக்கும்..!அன்பன் முனி...  [ Read More ]

Friday, January 29, 2010

6yhb

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, January 29, 2010 No comments

பிரம்மன் பிதற்றுகிறான்...!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, January 29, 2010 2 comments

காதல் போதையில் கச்சிதமாய் கம்பன் வடித்த கடைசி கவிதை நாம்...பிரம்மன் கூட பொறாமையில் பிதற்றுகிறான்...நம்மை படைக்க தெரிந்த அவனுக்கு நம்மை போல் காதலை படைக்க தெரியவில்லையே.....  [ Read More ]

Thursday, January 21, 2010

பைத்தியகாரர்கள்..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 1 comment

பைத்தியகாரர்கள் அப்புறம் என்ன.. உன்னை பார்த்த பின்னும் அழகி போட்டி நடத்துகிறார்களே.........  [ Read More ]

உழவன் இன்றி உலகேது..!! (தை 2010)

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 2 comments

உழவா..!நீ விழி மறந்து, வலி சுமந்து..வியர்வை விருந்திட்டு வளர்த்திட்டநெற்பயிரின்  வனப்பு கண்டு..வாய்பிளந்து பொழிகிறது  வான் மேகம்..!! மலை மறைவில் மறைய மறுக்கிறது,மயக்கத்தில் தினம் மாலை சூரியன்..!! மண்ணில் நீ விதைத்திட்டாலும்,கண் எனும் கற்ப பையில் அன்றோ வளர்த்திட்டாய்..!! ஒவ்வொரு விதையிலும் ஓராயிரம் உயிர் உருவாக்கி.. மண்ணிலும் முத்தெடுக்கும் வித்தையை உன்னிடத்திலன்றோ இனி பிரம்மனும் கற்று கொள்ள வேண்டும் ..!! உழைப்பை உருக்கியன்றோ அறுவடையை உரித்தாக்கினாய்உழைக்கும் முன்னே உருகிபோயிருக்கும் உன்னிடத்தில் மெழுகு இருந்திருந்தால்....  [ Read More ]

அப்ப கூட வரல..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 4 comments

நான் அழும் போதெல்லாம் அத்தனை முறைகை கொடுப்பாள் அம்மா .. அப்பவும் வரல..! நான் நடை பழகுவதிலிருந்து...உடை பழகும் வரை கை கொடுத்தார்  அப்பா... அப்ப கூட வரல..! தினம் நூறு பொய் சொல்லிநண்பனுடன் ஊர் சுற்றும் போதும் வரல..! ஓடும் ரயில் என ஒரு முறை தான் கை குடுத்தேன்..உன்னை கீழே விழாமல் பிடிப்பதற்காய்..! இப்போ வந்திருச்சு...அடுத்து நான் இறங்கும் முன்அந்த ரயிலை விட அத்தனை நீளமாய் கவிதை ..! இப்போ என்னாச்சு எனக்கு...??சத்தியமாய் விழ போனது நீதானே...??!!!...  [ Read More ]

நாளை வரை வரமாட்டாய்

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 1 comment

தனிமை தேடி நான் தனித்து நிற்கையில் ஆளே இல்லாத அறை... அங்கேயும் நீ இல்லாத குறை நிறைந்தே  நிற்கிறது..நீ செல்லமாய் தான் கிள்ளி சென்றாய்... எனக்கோ மொத்தமாய் இழந்த இதயம் போல் வலிக்கிறது நாளை வரை வரமாட்டாய் எனும் போது... நீ சிறிது பேசும் போது நிறுத்தி நிறுத்தி பேச மாட்டாயா என ஏங்குகிறேன்... களைத்து போய் நிறுத்திவிட்டால் என்ன பண்ணுவது... நாம் பேசுகையில் புற்களை செல்லமாய் தடவிநீ சிணுங்கும் போது சிதறும் சிரிப்பில் மெல்ல நான் பறக்கிறேன் உண்மையில் உன் சொற்களை மறந்து...  [ Read More ]

இருந்தும் வறட்சி..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 2 comments

நல்ல மழை..!நல்ல விளைச்சல்..! இருந்தும் வறட்சி..! வஞ்சி.. உன்னைவர்ணிக்க வார்த்தைகள் இல்லையே.....  [ Read More ]