இடம் மாறிய இதயத்தோடு தினம்

பழகிய பாதையிலும் பாதைதவறி,
பார்வை தேடிய பாதங்களே!!
கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில்
கவிதை பருகியதும் போதும் - இதோ
மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு
நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..!
பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம்
புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும்,
சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும்
புன்னகை வண்ணம் கொண்டு..!
பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன்
வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!
2 comments:
nalla iruku pasu ungaludaiya kavithai menmelum valara valthukal anbudan sri sathish
nantrikal kodi...sri sathish ungal varugaikkum vazhthukkum..!!!
Post a Comment