இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Friday, September 9, 2011

திருமணமாம் திருமணம்..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, September 09, 2011 2 comments


இடம் மாறிய இதயத்தோடு தினம் 
கனவில் கதை பேசியும்...
பழகிய பாதையிலும் பாதைதவறி, 

பார்வை தேடிய பாதங்களே!!
கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் 
கவிதை பருகியதும் போதும் - இதோ 
மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு 
நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..!
பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம்
புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், 
சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் 
புன்னகை வண்ணம் கொண்டு..!
பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் 
வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!

2 comments:

nalla iruku pasu ungaludaiya kavithai menmelum valara valthukal anbudan sri sathish

nantrikal kodi...sri sathish ungal varugaikkum vazhthukkum..!!!

Post a Comment