பூந்தளிர் வீசும் புதுமண வாசம்,புகுந்திடும் மலர்க்கணை மாதே..
மாதவம் புரிந்திட்ட மாசறு 'முத்தே'..!
வன்சொல் வசையறியா, இன்சொல் இனியவனாம்..
கூந்தல் குடியமரும் குளிர்மலர் குணத்தவனாம்..
மாந்தர் மனங்கவரும் எங்கள் 'ரெங்கராஜனை' !!
பொன்மஞ்சள் பூங்கயிறாக,
உம் நெஞ்சில் இன்னோர் உயிராக..
மானிரு கொம்பாய் மயக்கிடு தெம்பாய்..!!
பாசம் பரப்பும் பக்குவ புள்ளியிட்டு,
புதுநேசம் நிலைக்க நிச்சய கோடிணைத்து..
வாசம் வீசும் வாசல் பூக்கள் மலரட்டும்..!!
என மனதார வாழ்த்துகிறோம்..!!

0 comments:
Post a Comment