இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!
Showing posts with label பனித்துளி. Show all posts
Showing posts with label பனித்துளி. Show all posts

Saturday, April 3, 2010

ஒற்றை பனித்துளி..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Saturday, April 03, 2010 2 comments





உருகிய பின்னும்
இன்னும் உதிராமல்
உனக்காய் காத்திருக்கும்
ஒற்றை பனித்துளி..!

Sunday, February 14, 2010

காதலா..!! காமமா..??

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, February 14, 2010 2 comments

காரிருள் அள்ளிச் சூடிய

காலை கதிரவனின் 

கன்னிப் பார்வையில்

கண் மலர்ந்து

தனை மறந்து

உருகி... உயிர்விடும்


பனித்துளி....!

காதலா..!! காமமா..??

Thursday, January 21, 2010

நாளை வரை வரமாட்டாய்

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 1 comment

தனிமை தேடி நான் தனித்து நிற்கையில்
ஆளே இல்லாத அறை... அங்கேயும் நீ இல்லாத குறை நிறைந்தே  நிற்கிறது..
நீ செல்லமாய் தான் கிள்ளி சென்றாய்... 
எனக்கோ மொத்தமாய் இழந்த இதயம் போல் வலிக்கிறது
நாளை வரை வரமாட்டாய் எனும் போது...

நீ சிறிது பேசும் போது நிறுத்தி நிறுத்தி பேச மாட்டாயா என ஏங்குகிறேன்... களைத்து போய் நிறுத்திவிட்டால் என்ன பண்ணுவது...

நாம் பேசுகையில் புற்களை செல்லமாய் தடவி
நீ சிணுங்கும் போது சிதறும் சிரிப்பில் 
மெல்ல நான் பறக்கிறேன் உண்மையில் உன் சொற்களை மறந்து...