இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Friday, December 11, 2009

கள்ளியிடம் களவாடச் சென்றேன்...!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, December 11, 2009 3 comments

அன்று...
உன் புன்னகை திருடிய
என் இதயத்தைத் தேடி,
உன் கண்ணெதிரே வந்தேன்...
இன்று உன் கண்ணொளியில்,
என்னையே திருடி விட்டாயே  கள்ளி.....!!!
கள்ளியிடமே களவாட வந்தது
என் தவறு தான்...!!

உண்மையாய் ஒரு உண்மை..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, December 11, 2009 2 comments

கண்ணே..
உன்னை காணாத நாட்களில் -
குருடனாகிறேன்..!
கண்ட மாத்திரத்தில் கவிஞன் ஆகிறேன்..!


உன்னை நினைக்காத நாட்களில் -
நித்திரை இழக்கிறேன்..!
நினைத்த மாத்திரத்தில் என்னையே இழக்கிறேன்..!


உன்னுடன் பேசாத நாட்களில் -
ஊமையாகிறேன்..!
மறக்கும் நாளில் மரணத்தை மணந்திருப்பேன்..!











உன் பாத சுவட்டில் என் பயணம்..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, December 11, 2009 6 comments

என் பாதங்கள் கூட..
இப்போதெல்லாம்
உன் பாதையை தேட ஆரம்பித்து விட்டன!
நீ பார்வையால் பேசி கடந்த பின்னும்,
உன் நகம் கடிக்கிறேன்..
நீ நடந்த பாதையில் !
மெல்ல மெல்ல உன் பாத சுவடுகளும்,
என் பார்வை தாங்கி..
புன்னகை சுமக்க பழகி விட்டன !
அட இதையெல்லாம் விடு...
இப்போதெல்லாம்,
உன் பெயர் கூட..
என்னுடன் பேச தொடங்கி விட்டது
நீ எப்போது....??
























Wednesday, December 9, 2009

முதல் கவிதை ...!!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, December 09, 2009 4 comments

அன்று 
பேருந்தில் ஒரு முறை தான்..
உந்தன் கண்ணை தேடினேன்!
அடடா...
இன்று வரை தேடி கொண்டே இருக்கிறேன்..
என்னை 
அங்கேயே தொலைத்து விட்டு..!