Friday, December 11, 2009
கள்ளியிடம் களவாடச் சென்றேன்...!!
உன் புன்னகை திருடிய
என் இதயத்தைத் தேடி,
உன் கண்ணெதிரே வந்தேன்...
இன்று உன் கண்ணொளியில்,
என்னையே திருடி விட்டாயே கள்ளி.....!!!
கள்ளியிடமே களவாட வந்தது
என் தவறு தான்...!!
Tamil Kavithai | தமிழ் கவிதைகள்
இடம் மாறிய இதயத்தோடு தினம் கனவில் கதை பேசியும்... பழகிய பாதையிலும் பாதைதவறி, பார்வை தேடிய பாதங்களே!! கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் கவிதை பருகியதும் போதும் - இதோ மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..! பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம் புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் புன்னகை வண்ணம் கொண்டு..! பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!
3 comments:
அட அட.... என்னமா பீல் பண்றாரு நம்ம அய்யா.....???
முடியல ராஜா முடியல......
nice lines muni....!!
//அன்று...
உன் புன்னகை திருடிய
என் இதயத்தைத் தேடி,
உன் கண்ணெதிரே வந்தேன்...
இன்று உன் கண்ணொளியில்,
என்னையே திருடி விட்டாயே கள்ளி.....!!!
கள்ளியிடமே களவாட வந்தது
என் தவறு தான்...!!///
short and sweeeeet varigal Muni
Post a Comment