Friday, December 11, 2009
கள்ளியிடம் களவாடச் சென்றேன்...!!
உன் புன்னகை திருடிய
என் இதயத்தைத் தேடி,
உன் கண்ணெதிரே வந்தேன்...
இன்று உன் கண்ணொளியில்,
என்னையே திருடி விட்டாயே கள்ளி.....!!!
கள்ளியிடமே களவாட வந்தது
என் தவறு தான்...!!
இடம் மாறிய இதயத்தோடு தினம் கனவில் கதை பேசியும்... பழகிய பாதையிலும் பாதைதவறி, பார்வை தேடிய பாதங்களே!! கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் கவிதை பருகியதும் போதும் - இதோ மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..! பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம் புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் புன்னகை வண்ணம் கொண்டு..! பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!
3 comments:
அட அட.... என்னமா பீல் பண்றாரு நம்ம அய்யா.....???
முடியல ராஜா முடியல......
nice lines muni....!!
//அன்று...
உன் புன்னகை திருடிய
என் இதயத்தைத் தேடி,
உன் கண்ணெதிரே வந்தேன்...
இன்று உன் கண்ணொளியில்,
என்னையே திருடி விட்டாயே கள்ளி.....!!!
கள்ளியிடமே களவாட வந்தது
என் தவறு தான்...!!///
short and sweeeeet varigal Muni
Post a Comment