இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!
Showing posts with label புன்னகை. Show all posts
Showing posts with label புன்னகை. Show all posts

Sunday, March 28, 2010

மௌனமாய் கொலுசு..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 28, 2010 4 comments

  
கொலுசும்..கொஞ்ச நேரம் 
மௌனமாய் ரசிக்கிறது 
நீ சிணுங்குவதை..!

தாமரையும்..
நீச்சலை மறந்து தண்ணீரில்
தத்தளித்து மூழ்கப் பார்க்கிறது
நீ கடக்கும் போது..!
  
பிரம்மனும்..
புன்னகைக்கு புது விலாசத்தை
உன் இதழ் அசைவில் அஞ்சலாய்
அனுப்பி உள்ளான் போலும் ..!

Friday, December 11, 2009

கள்ளியிடம் களவாடச் சென்றேன்...!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, December 11, 2009 3 comments

அன்று...
உன் புன்னகை திருடிய
என் இதயத்தைத் தேடி,
உன் கண்ணெதிரே வந்தேன்...
இன்று உன் கண்ணொளியில்,
என்னையே திருடி விட்டாயே  கள்ளி.....!!!
கள்ளியிடமே களவாட வந்தது
என் தவறு தான்...!!