வந்தோரெல்லாம் தங்கிச்சென்ற வெறும் சத்திரமா ..??
இல்லை இல்லை ....
ரத்தமின்றி கத்தியின்றி நித்தம் யுத்தம் புகுந்து,
வாழ்வை தொலைத்து, வலியை விதைத்து,
உயிரில் விளைத்திட்ட சரித்திரம்..!!
பயிரை மேய்ந்த பகைவர் கூட்டம் பதுங்கி நடுங்கிட்ட
காற்றும் அறியா கடின ஆயுதமாம் அகிம்சை தந்திட்ட அமைதி தேசம்..!!
ஏய் இளைய பாரதமே...!!
குமரனின் கொடியும் பகவத்சிங்கின் நெடியும் நிறைந்து வீசிட்டதும் ,
வீர சுபாசு வெகுண்டு எழுந்திட்டதும்..
எதற்காய்???
புழுங்கி திரியும் லஞ்ச பேயும்,
மழுங்கி திரியும் மதவெறியும்..
மணிமகுடம் ஏறிஅமரவா???
மறுபடியும் மறித்திட விடாதே,
ஒருமுறை உனக்காய் உயிர் விட்ட..
மாபெரும் தியாகிகளை..!!
ஒருமுறை உரக்கச் சொல்லி விடு,
எம் பாரத மாதா வெறும் சத்திரம் அல்ல...
சரித்திரம்...!!!