இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!
Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Wednesday, September 7, 2011

மண் கண்ட தெய்வம் ..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, September 07, 2011 No comments

உழவா..!
எம் தாய் திருநாட்டின் தங்கப்புதல்வா !!
உனைப்போல் உன்னதமாய் 
உழவை அறிந்தோர் உலகில் எவருளர் ??
 
ஆயிரமாயிரம் ஆங்கில உரங்கள்,
எம் அன்னை மண்ணை அழித்திட்டாலும்..
ஒப்பிலா உம் உன்னத உழைப்பாலன்றோ
பஞ்ச பூதங்களும் பக்குவமாய், இன்னும் பத்திரமாய்..!

உயிர்களிடத்தே பாசமில்லா இப்பூவுலகில்,
பயிர்களிடத்தும் பந்தம் காட்டும் பகலவன் நீயன்றோ..!
தென்றல் தீண்டும் தென்னாடு,
இம்மண்ணை ஆண்ட மறத்தமிழர் இனமே உழவா உன்னோடு !!

Saturday, April 3, 2010

ஒற்றை பனித்துளி..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Saturday, April 03, 2010 2 comments





உருகிய பின்னும்
இன்னும் உதிராமல்
உனக்காய் காத்திருக்கும்
ஒற்றை பனித்துளி..!

Sunday, February 14, 2010

காதலா..!! காமமா..??

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, February 14, 2010 2 comments

காரிருள் அள்ளிச் சூடிய

காலை கதிரவனின் 

கன்னிப் பார்வையில்

கண் மலர்ந்து

தனை மறந்து

உருகி... உயிர்விடும்


பனித்துளி....!

காதலா..!! காமமா..??

Thursday, February 11, 2010

படையெடு இன்றே..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, February 11, 2010 1 comment


வானவில் கொடி ஏந்தும்
வானப்படையின் மேகப் போர்வீரனே..
படையெடு இன்றே
பஞ்சத்தின் பாதக ஆட்சி அகற்ற..!

ஆயிரம் படை கண்டேன் - அவர்தம்
ஆயிரம் கொடி கண்டேன்
எவரதும் இல்லை உன்போல்
ஏழு வண்ணத்தில்..!!

உயிர் உறையும் போர்க்களம்
ஆயிரம் கண்டதுண்டு..!
பயிர் விளையும் போர்க்களம் 
உன் களம் மட்டுமே..!
படையெடு இன்றே
பஞ்சத்தின் பாதக ஆட்சி அகற்ற..!

Thursday, January 21, 2010

நாளை வரை வரமாட்டாய்

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 1 comment

தனிமை தேடி நான் தனித்து நிற்கையில்
ஆளே இல்லாத அறை... அங்கேயும் நீ இல்லாத குறை நிறைந்தே  நிற்கிறது..
நீ செல்லமாய் தான் கிள்ளி சென்றாய்... 
எனக்கோ மொத்தமாய் இழந்த இதயம் போல் வலிக்கிறது
நாளை வரை வரமாட்டாய் எனும் போது...

நீ சிறிது பேசும் போது நிறுத்தி நிறுத்தி பேச மாட்டாயா என ஏங்குகிறேன்... களைத்து போய் நிறுத்திவிட்டால் என்ன பண்ணுவது...

நாம் பேசுகையில் புற்களை செல்லமாய் தடவி
நீ சிணுங்கும் போது சிதறும் சிரிப்பில் 
மெல்ல நான் பறக்கிறேன் உண்மையில் உன் சொற்களை மறந்து...