இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

116331

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Wednesday, September 7, 2011

மண் கண்ட தெய்வம் ..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, September 07, 2011 No comments

உழவா..!
எம் தாய் திருநாட்டின் தங்கப்புதல்வா !!
உனைப்போல் உன்னதமாய் 
உழவை அறிந்தோர் உலகில் எவருளர் ??
 
ஆயிரமாயிரம் ஆங்கில உரங்கள்,
எம் அன்னை மண்ணை அழித்திட்டாலும்..
ஒப்பிலா உம் உன்னத உழைப்பாலன்றோ
பஞ்ச பூதங்களும் பக்குவமாய், இன்னும் பத்திரமாய்..!

உயிர்களிடத்தே பாசமில்லா இப்பூவுலகில்,
பயிர்களிடத்தும் பந்தம் காட்டும் பகலவன் நீயன்றோ..!
தென்றல் தீண்டும் தென்னாடு,
இம்மண்ணை ஆண்ட மறத்தமிழர் இனமே உழவா உன்னோடு !!

0 comments:

Post a Comment