அடடா...
என்னை
Tamil Kavithai | தமிழ் கவிதைகள்
இடம் மாறிய இதயத்தோடு தினம் கனவில் கதை பேசியும்... பழகிய பாதையிலும் பாதைதவறி, பார்வை தேடிய பாதங்களே!! கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் கவிதை பருகியதும் போதும் - இதோ மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..! பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம் புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் புன்னகை வண்ணம் கொண்டு..! பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!
4 comments:
intha koduma eppo nadanthathu.......???
muthal kavithaiye superda.....
innum neraya elutha ennoda wishes...!!!
police la complaint pannunga lm avangalavathu kandu pidichu tharrangalanu pakkalam
all the best for ur searching....
nice one man
Post a Comment