இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!
Showing posts with label தாமரை. Show all posts
Showing posts with label தாமரை. Show all posts

Sunday, March 28, 2010

தண்ணீரில் விழுந்த தாமரை..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 28, 2010 6 comments



தண்ணீரில் தவறி விழுந்த
தாமரை இதழாய் நித்தம் தவிக்கிறேன்
ஒட்டி உறவாடவும் இல்லை..
விட்டு விலகவும் இல்லை..
முட்டி மோதுகிறேன்,
உன் நினைவுகளோடு...!!

மௌனமாய் கொலுசு..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 28, 2010 4 comments

  
கொலுசும்..கொஞ்ச நேரம் 
மௌனமாய் ரசிக்கிறது 
நீ சிணுங்குவதை..!

தாமரையும்..
நீச்சலை மறந்து தண்ணீரில்
தத்தளித்து மூழ்கப் பார்க்கிறது
நீ கடக்கும் போது..!
  
பிரம்மனும்..
புன்னகைக்கு புது விலாசத்தை
உன் இதழ் அசைவில் அஞ்சலாய்
அனுப்பி உள்ளான் போலும் ..!