இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Tuesday, September 27, 2011

இப்படிக்கு, நானும் நம் காதலும் தூங்கும் கல்லறை.

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, September 27, 2011 1 comment






அடடா அதற்குள் ஒருவருடம் ஆயிற்றா....
கண்ணீர் ஊற்றி என் கல்லறைத்தூக்கம் கலைத்தவளே நில்...
இன்றாவது நான் சொல்வதை பொறுமையாய், முழுமையாய் கேள்...!! 
தயவு செய்து... 
என் கல்லறையிலாவது, 
ஒரு முற்றுப்புள்ளி இட்டு போ..!!
அய்யகோ...!!! 
உனக்காய் உயிரை விட்டு, 
உன் பிள்ளைக்காய் பெயரையும் விட்டு, 
எதிர்வரும் பிறவியிலும்...
என் நினைவு நாளில் மட்டும்,
உன் நினைவில் வாழ வைத்துவிடாதே....!!


இப்படிக்கு,
நானும் நம் காதலும் தூங்கும் கல்லறை. 

  



Friday, September 9, 2011

திருமணமாம் திருமணம்..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, September 09, 2011 2 comments


இடம் மாறிய இதயத்தோடு தினம் 
கனவில் கதை பேசியும்...
பழகிய பாதையிலும் பாதைதவறி, 

பார்வை தேடிய பாதங்களே!!
கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் 
கவிதை பருகியதும் போதும் - இதோ 
மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு 
நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..!
பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம்
புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், 
சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் 
புன்னகை வண்ணம் கொண்டு..!
பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் 
வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!

Wednesday, September 7, 2011

காலவெள்ளம் கண்டிரா காதல் ஓவியம் காணுங்கள்

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, September 07, 2011 No comments

சுந்தர சோலைதனில், சந்தன சாதிமுல்லையென..
சுபம் ஆயிரம் சூடிடவந்த 'சுப்புலட்சுமியே'..
தெவிட்டாத தேனமுதாய், வேண்டியதை விரைந்தருளும்..
வெற்றி விநாயகன் வாரி வழங்கிட்ட 'செல்வகுமரனை'..
முன்னோர் ஜென்மத்தின் முழுபயனால் - நீ
வாங்கிவந்திட்ட வரந்தான் உன்தோள் சேர்த்தது..!! - இனி
ஊண் உறக்கம் ஒதுங்கி நின்றிட,
காலவெள்ளம் கண்டிரா காதல் ஓவியம் காணுங்கள்..
கம்பன் வந்து காப்பியமாக்கிடுவான்..!!
நேற்றென்ற மாயைநீக்கி, நாளைதனை நனவாக்கிடும்..
உன்னத கனவோடு ஒப்பற்று வாழுங்கள்..!
வான்புகழ வாழ்ந்தோர் வழிநின்று..!!

மந்திர நாண்..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, September 07, 2011 No comments



மாக்கோலம் பூந்தோரணம், குலை வாழையோடு, 
தினம் திகட்டா தேன்மதுர தீஞ்சுவை செந்தேனாய்..
வான்பொதிகை வண்ணமயில் எண்ணம் கொண்டு 
சம்மத மௌனங்கள் சாட்சியாய்...


மாதவப்புதல்வி, மங்கையற்கரசி 'செந்தமிழ்செல்வியை' 
மஞ்சள் கயிறோடு,ஊன்  உயிர் உறைசெரும்
மறவாத மாணிக்கமாய் மனிதருள் உறவாடிய 
சிவசுப்ரமணிய புதல்வா 'ரமேசு' - நீ 
வாழ்க பல்லாண்டு...! என வள்ளுவன் குறள் வாழ்த்த 
நறுமணமாய் நாளும் மலருங்கள் தமிழாக!
இதிகாச இலக்கணங்கள் வாழ்க்கை தத்துவம்
எடுத்துரைக்க.. எழுதுங்கள் இல்லற வாழ்வை,
'வள்ளுவன்-வாசுகியாக' வாழ்ந்தார்கள் என...!! 

மங்கள நாதம் கொஞ்சிடும் நேரம்..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, September 07, 2011 No comments

கவிதை பேசும் விழிகள் இனி,
காதல் மொழி பேசட்டுமே..!! 
காப்பியம் ஆயிரம் கண்டிரா,
ஒப்பிலா உம் காதல் கதைதனை..!!

காலை வெண்பனியின் தெளிவாய், கார்முகில் வடிவாய்..
காதல்கலையை காப்பியமாக்கிட்ட 'கலைச்செல்வியே'..
இந்திரனே இவனென சந்திரன் மயங்கிடும்,
நற்றமிழ் அழகன் எம் 'சரவணக்குமரனை' ..!

மங்கள நாதம் கொஞ்சிடும் நேரம்,
வந்திடும் ஆயிரம் சொந்தங்கள் சூழ்ந்திட - இனி
சொந்தமே இவனென மந்திர மாலைசூடு..!
முன்னின்று வாழ்த்திடும் முத்தமிழ் வேதங்களோடு,
உன்தோள் நின்று துணையாய் எப்போதும் நாங்கள்..!!

மணநாள் காணும் திருநாள் ..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, September 07, 2011 No comments

பூந்தளிர் வீசும் புதுமண வாசம்,
புகுந்திடும் மலர்க்கணை மாதே..
மாதவம் புரிந்திட்ட மாசறு 'முத்தே'..!
வன்சொல் வசையறியா, இன்சொல் இனியவனாம்..
கூந்தல் குடியமரும் குளிர்மலர் குணத்தவனாம்..
மாந்தர் மனங்கவரும் எங்கள் 'ரெங்கராஜனை' !!
பொன்மஞ்சள் பூங்கயிறாக,

உம் நெஞ்சில் இன்னோர் உயிராக..
மானிரு கொம்பாய் மயக்கிடு தெம்பாய்..!! 

பாசம் பரப்பும் பக்குவ புள்ளியிட்டு,
புதுநேசம் நிலைக்க நிச்சய கோடிணைத்து..
வாசம் வீசும் வாசல் பூக்கள் மலரட்டும்..!!
என மனதார வாழ்த்துகிறோம்..!!

பூப்புனித நீராட்டு விழா ..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, September 07, 2011 10 comments

                                                மஞ்சள் நீராடி மங்களம் தேடி வரும்..
                                              கொஞ்சும் குல மகளாம்  'ஆனந்த செல்வியே '..!

                                                                தீராத விளையாட்டையும் - தினம் 
திகட்டாத சிறு குறும்பையும் புறந்தள்ளி.. 

பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய்,
பால்நிலா தாங்கும் வான்முகிலாய்.. 

தெளிந்த வெண்பனியாய், திசைபல வென்று..
திரவியம் பலதேடி, தெள்ளு தமிழாய்..

மலர்கோடி சூடி மணிமகுடம் தாங்கி..
பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம் நாங்களும்..!!

இனிதே ஆரம்பம் இன்னோர் காவியம்..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, September 07, 2011 No comments



மழைக்கால மலர்க்கூட்டமாய்,
மாந்தளிர் தழுவும் வெண்பனி மூட்டமாய்,
கோவைக்கனி சுமக்கும் கோடிப்புன்னகையாய்,
பொன்மஞ்சள் கயிறோடு உயிரில் சுமந்திடு..
வான்முகில் தேடும் வானவில் 'சுந்தர வள்ளியே' - எம்
காவியம் காணா ஓவியம் 'சக்திவடிவேலை' ..!

செந்தமிழின் சுவையாய், செங்கரும்புச்சாறாய்,
செங்கமல மலராய் சங்கமிக்கும் சந்தன மலர்களே..
மங்களம் பொங்கவரும் உம் இல்லறம் சிறக்க..
முக்கோடி தேவர்களும் தப்பாது வாழ்த்தி நிற்க..!
மலர்க்கோடி தூவிநின்று மனதார வாழ்த்துகிறோம் நாங்களும்..!!

மண் கண்ட தெய்வம் ..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, September 07, 2011 No comments

உழவா..!
எம் தாய் திருநாட்டின் தங்கப்புதல்வா !!
உனைப்போல் உன்னதமாய் 
உழவை அறிந்தோர் உலகில் எவருளர் ??
 
ஆயிரமாயிரம் ஆங்கில உரங்கள்,
எம் அன்னை மண்ணை அழித்திட்டாலும்..
ஒப்பிலா உம் உன்னத உழைப்பாலன்றோ
பஞ்ச பூதங்களும் பக்குவமாய், இன்னும் பத்திரமாய்..!

உயிர்களிடத்தே பாசமில்லா இப்பூவுலகில்,
பயிர்களிடத்தும் பந்தம் காட்டும் பகலவன் நீயன்றோ..!
தென்றல் தீண்டும் தென்னாடு,
இம்மண்ணை ஆண்ட மறத்தமிழர் இனமே உழவா உன்னோடு !!

Monday, August 15, 2011

உரக்கச் சொல்வோம் சரித்திரம் தனை..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Monday, August 15, 2011 2 comments



வந்தோரெல்லாம் தங்கிச்சென்ற வெறும் சத்திரமா ..??
இல்லை இல்லை .... 
ரத்தமின்றி கத்தியின்றி நித்தம் யுத்தம் புகுந்து, 
வாழ்வை தொலைத்து, வலியை விதைத்து,  
உயிரில் விளைத்திட்ட சரித்திரம்..!!


பயிரை மேய்ந்த பகைவர் கூட்டம் பதுங்கி நடுங்கிட்ட 
காற்றும் அறியா கடின ஆயுதமாம் அகிம்சை தந்திட்ட அமைதி தேசம்..!!

ஏய் இளைய பாரதமே...!!
குமரனின் கொடியும் பகவத்சிங்கின் நெடியும் நிறைந்து வீசிட்டதும் ,
வீர சுபாசு வெகுண்டு எழுந்திட்டதும்..
எதற்காய்???


புழுங்கி திரியும் லஞ்ச பேயும்,
மழுங்கி திரியும் மதவெறியும்..
மணிமகுடம் ஏறிஅமரவா??? 


மறுபடியும் மறித்திட விடாதே,
ஒருமுறை உனக்காய் உயிர் விட்ட..
மாபெரும் தியாகிகளை..!!


ஒருமுறை உரக்கச் சொல்லி விடு,
எம் பாரத மாதா வெறும் சத்திரம் அல்ல...
சரித்திரம்...!!!


Saturday, February 26, 2011

நறுமணம் பூக்கும் திருமணம்...!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Saturday, February 26, 2011 No comments


ஜோடி நல்ல ஜோடி ..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Saturday, February 26, 2011 No comments