அடடா அதற்குள் ஒருவருடம் ஆயிற்றா....
கண்ணீர் ஊற்றி என் கல்லறைத்தூக்கம் கலைத்தவளே நில்...
இன்றாவது நான் சொல்வதை பொறுமையாய், முழுமையாய் கேள்...!!
தயவு செய்து...
என் கல்லறையிலாவது,
ஒரு முற்றுப்புள்ளி இட்டு போ..!!
அய்யகோ...!!!
உனக்காய் உயிரை விட்டு,
உன் பிள்ளைக்காய் பெயரையும் விட்டு,
எதிர்வரும் பிறவியிலும்...
என் நினைவு நாளில் மட்டும்,
உன் நினைவில் வாழ வைத்துவிடாதே....!!
இப்படிக்கு,
நானும் நம் காதலும் தூங்கும் கல்லறை.