இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!
Showing posts with label ரயில். Show all posts
Showing posts with label ரயில். Show all posts

Thursday, January 21, 2010

அப்ப கூட வரல..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 4 comments

நான் அழும் போதெல்லாம் அத்தனை முறை
கை கொடுப்பாள் அம்மா .. அப்பவும் வரல..!

நான் நடை பழகுவதிலிருந்து...
உடை பழகும் வரை கை கொடுத்தார்  அப்பா... அப்ப கூட வரல..!

தினம் நூறு பொய் சொல்லி
நண்பனுடன் ஊர் சுற்றும் போதும் வரல..!

ஓடும் ரயில் என ஒரு முறை தான் கை குடுத்தேன்..
உன்னை கீழே விழாமல் பிடிப்பதற்காய்..!

இப்போ வந்திருச்சு...
அடுத்து நான் இறங்கும் முன்
அந்த ரயிலை விட அத்தனை நீளமாய் கவிதை ..!

இப்போ என்னாச்சு எனக்கு...??
சத்தியமாய் விழ போனது நீதானே...??!!!!