Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Saturday, June 16, 2012
Friday, June 8, 2012
Sunday, May 13, 2012
அன்னையர் தினம்
நான் சுற்றித்திரிந்த உலகமே...
என்னை தூக்கி சுமந்த அகிலமே...
நான் இந்த உலகையே கைப்பற்ற கூட வேணாம்,
உன் கைப்பற்றி நடந்திட்டாலே போதும்...
என்னை விட என்னை அறிந்த
உன்னை போற்றும் இந்த ஒரு நொடி போதும்
மறித்து....
மறுபடியும் மறுபடியும் மண்ணில் பிறந்திட வேண்டும்
உன் மகன் என்ற அந்த ஒற்றைச் சொல்லுக்காய்....
அன்னையர் தின வாழ்த்துக்களுடன்
என்றும் உங்கள்
LM
Wednesday, September 7, 2011
மங்கள நாதம் கொஞ்சிடும் நேரம்..!!
கவிதை பேசும் விழிகள் இனி,
காதல் மொழி பேசட்டுமே..!!
காதல் மொழி பேசட்டுமே..!!
காப்பியம் ஆயிரம் கண்டிரா,
ஒப்பிலா உம் காதல் கதைதனை..!!
காலை வெண்பனியின் தெளிவாய், கார்முகில் வடிவாய்..
காதல்கலையை காப்பியமாக்கிட்ட 'கலைச்செல்வியே'..
இந்திரனே இவனென சந்திரன் மயங்கிடும்,
நற்றமிழ் அழகன் எம் 'சரவணக்குமரனை' ..!
ஒப்பிலா உம் காதல் கதைதனை..!!
காலை வெண்பனியின் தெளிவாய், கார்முகில் வடிவாய்..
காதல்கலையை காப்பியமாக்கிட்ட 'கலைச்செல்வியே'..
இந்திரனே இவனென சந்திரன் மயங்கிடும்,
நற்றமிழ் அழகன் எம் 'சரவணக்குமரனை' ..!
மங்கள நாதம் கொஞ்சிடும் நேரம்,
வந்திடும் ஆயிரம் சொந்தங்கள் சூழ்ந்திட - இனி
சொந்தமே இவனென மந்திர மாலைசூடு..!
முன்னின்று வாழ்த்திடும் முத்தமிழ் வேதங்களோடு,
உன்தோள் நின்று துணையாய் எப்போதும் நாங்கள்..!!
மணநாள் காணும் திருநாள் ..!!
பூந்தளிர் வீசும் புதுமண வாசம்,புகுந்திடும் மலர்க்கணை மாதே..
மாதவம் புரிந்திட்ட மாசறு 'முத்தே'..!
வன்சொல் வசையறியா, இன்சொல் இனியவனாம்..
கூந்தல் குடியமரும் குளிர்மலர் குணத்தவனாம்..
மாந்தர் மனங்கவரும் எங்கள் 'ரெங்கராஜனை' !!
பொன்மஞ்சள் பூங்கயிறாக,
உம் நெஞ்சில் இன்னோர் உயிராக..
மானிரு கொம்பாய் மயக்கிடு தெம்பாய்..!!
பாசம் பரப்பும் பக்குவ புள்ளியிட்டு,
புதுநேசம் நிலைக்க நிச்சய கோடிணைத்து..
வாசம் வீசும் வாசல் பூக்கள் மலரட்டும்..!!
என மனதார வாழ்த்துகிறோம்..!!
Thursday, January 21, 2010
அப்ப கூட வரல..!
கை கொடுப்பாள் அம்மா .. அப்பவும் வரல..!
நான் நடை பழகுவதிலிருந்து...
உடை பழகும் வரை கை கொடுத்தார் அப்பா... அப்ப கூட வரல..!
தினம் நூறு பொய் சொல்லி
நண்பனுடன் ஊர் சுற்றும் போதும் வரல..!
ஓடும் ரயில் என ஒரு முறை தான் கை குடுத்தேன்..
உன்னை கீழே விழாமல் பிடிப்பதற்காய்..!
இப்போ வந்திருச்சு...
அடுத்து நான் இறங்கும் முன்
அந்த ரயிலை விட அத்தனை நீளமாய் கவிதை ..!
இப்போ என்னாச்சு எனக்கு...??
சத்தியமாய் விழ போனது நீதானே...??!!!!

.jpeg)




