கொஞ்சும் குல மகளாம் 'ஆனந்த செல்வியே '..!
தீராத விளையாட்டையும் - தினம்
பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய்,
பால்நிலா தாங்கும் வான்முகிலாய்..
தெளிந்த வெண்பனியாய், திசைபல வென்று..
திரவியம் பலதேடி, தெள்ளு தமிழாய்..
மலர்கோடி சூடி மணிமகுடம் தாங்கி..
பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம் நாங்களும்..!!

