இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Friday, January 29, 2010

6yhb

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, January 29, 2010 No comments

பிரம்மன் பிதற்றுகிறான்...!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, January 29, 2010 2 comments

காதல் போதையில் கச்சிதமாய்
கம்பன் வடித்த கடைசி கவிதை நாம்...
பிரம்மன் கூட பொறாமையில் பிதற்றுகிறான்...
நம்மை படைக்க தெரிந்த அவனுக்கு
நம்மை போல் காதலை படைக்க தெரியவில்லையே...!!

Thursday, January 21, 2010

பைத்தியகாரர்கள்..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 1 comment

பைத்தியகாரர்கள்
அப்புறம் என்ன..
உன்னை பார்த்த பின்னும்
அழகி போட்டி நடத்துகிறார்களே.......!!

உழவன் இன்றி உலகேது..!! (தை 2010)

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 2 comments

உழவா..!
நீ விழி மறந்து, வலி சுமந்து..
வியர்வை விருந்திட்டு வளர்த்திட்ட
நெற்பயிரின்  வனப்பு கண்டு..
வாய்பிளந்து பொழிகிறது  வான் மேகம்..!!

மலை மறைவில் மறைய மறுக்கிறது,
மயக்கத்தில் தினம் மாலை சூரியன்..!!

மண்ணில் நீ விதைத்திட்டாலும்,
கண் எனும் கற்ப பையில் அன்றோ வளர்த்திட்டாய்..!!

ஒவ்வொரு விதையிலும் ஓராயிரம் உயிர் உருவாக்கி..
மண்ணிலும் முத்தெடுக்கும் வித்தையை
உன்னிடத்திலன்றோ இனி பிரம்மனும் கற்று கொள்ள வேண்டும் ..!!

உழைப்பை உருக்கியன்றோ அறுவடையை உரித்தாக்கினாய்
உழைக்கும் முன்னே உருகிபோயிருக்கும் 
உன்னிடத்தில் மெழுகு இருந்திருந்தால்..!!

அப்ப கூட வரல..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 4 comments

நான் அழும் போதெல்லாம் அத்தனை முறை
கை கொடுப்பாள் அம்மா .. அப்பவும் வரல..!

நான் நடை பழகுவதிலிருந்து...
உடை பழகும் வரை கை கொடுத்தார்  அப்பா... அப்ப கூட வரல..!

தினம் நூறு பொய் சொல்லி
நண்பனுடன் ஊர் சுற்றும் போதும் வரல..!

ஓடும் ரயில் என ஒரு முறை தான் கை குடுத்தேன்..
உன்னை கீழே விழாமல் பிடிப்பதற்காய்..!

இப்போ வந்திருச்சு...
அடுத்து நான் இறங்கும் முன்
அந்த ரயிலை விட அத்தனை நீளமாய் கவிதை ..!

இப்போ என்னாச்சு எனக்கு...??
சத்தியமாய் விழ போனது நீதானே...??!!!!


நாளை வரை வரமாட்டாய்

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 1 comment

தனிமை தேடி நான் தனித்து நிற்கையில்
ஆளே இல்லாத அறை... அங்கேயும் நீ இல்லாத குறை நிறைந்தே  நிற்கிறது..
நீ செல்லமாய் தான் கிள்ளி சென்றாய்... 
எனக்கோ மொத்தமாய் இழந்த இதயம் போல் வலிக்கிறது
நாளை வரை வரமாட்டாய் எனும் போது...

நீ சிறிது பேசும் போது நிறுத்தி நிறுத்தி பேச மாட்டாயா என ஏங்குகிறேன்... களைத்து போய் நிறுத்திவிட்டால் என்ன பண்ணுவது...

நாம் பேசுகையில் புற்களை செல்லமாய் தடவி
நீ சிணுங்கும் போது சிதறும் சிரிப்பில் 
மெல்ல நான் பறக்கிறேன் உண்மையில் உன் சொற்களை மறந்து...

இருந்தும் வறட்சி..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 2 comments

நல்ல மழை..!
நல்ல விளைச்சல்..!
இருந்தும் வறட்சி..!
வஞ்சி..
உன்னை
வர்ணிக்க
வார்த்தைகள்
இல்லையே....!