Friday, January 29, 2010
பிரம்மன் பிதற்றுகிறான்...!!
காதல் போதையில் கச்சிதமாய்
கம்பன் வடித்த கடைசி கவிதை நாம்...
பிரம்மன் கூட பொறாமையில் பிதற்றுகிறான்...
நம்மை படைக்க தெரிந்த அவனுக்கு
நம்மை போல் காதலை படைக்க தெரியவில்லையே...!!
Tamil Kavithai | தமிழ் கவிதைகள்
இடம் மாறிய இதயத்தோடு தினம் கனவில் கதை பேசியும்... பழகிய பாதையிலும் பாதைதவறி, பார்வை தேடிய பாதங்களே!! கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் கவிதை பருகியதும் போதும் - இதோ மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..! பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம் புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் புன்னகை வண்ணம் கொண்டு..! பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!
2 comments:
piramanayum vittu vakkalaya pa nee
arumai..
Post a Comment