Friday, January 29, 2010
பிரம்மன் பிதற்றுகிறான்...!!
காதல் போதையில் கச்சிதமாய்
கம்பன் வடித்த கடைசி கவிதை நாம்...
பிரம்மன் கூட பொறாமையில் பிதற்றுகிறான்...
நம்மை படைக்க தெரிந்த அவனுக்கு
நம்மை போல் காதலை படைக்க தெரியவில்லையே...!!
இடம் மாறிய இதயத்தோடு தினம் கனவில் கதை பேசியும்... பழகிய பாதையிலும் பாதைதவறி, பார்வை தேடிய பாதங்களே!! கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் கவிதை பருகியதும் போதும் - இதோ மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..! பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம் புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் புன்னகை வண்ணம் கொண்டு..! பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!
2 comments:
piramanayum vittu vakkalaya pa nee
arumai..
Post a Comment