Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts
Saturday, June 16, 2012
Sunday, June 10, 2012
Friday, June 8, 2012
நீ குளித்த தண்ணீரில்...!!
நீ மட்டும்உம்மென்று..
ஒரு வார்த்தை சொல்..!!
வானத்தை கவிழ்த்தி வைக்கிறேன்...!!
மேகத்தில் நீ மெதுவாய் குளித்திடு...!!
மின்னலை
கொஞ்சம் நிமிர்த்தி வைக்கிறேன்..!!
மெல்ல நீ
சடையில் பின்னிடு....!!
கொஞ்சம் பொறு...!!
நீ குளித்த தண்ணீரில்
நிலவை கொஞ்சம் கழுவி வைக்கிறேன்...!!
நீ முகம் பார்க்கும் அளவுக்கு
அது ஒன்றும் அத்தனை வெளுப்பில்லை...!!!
Tuesday, September 27, 2011
இப்படிக்கு, நானும் நம் காதலும் தூங்கும் கல்லறை.

அடடா அதற்குள் ஒருவருடம் ஆயிற்றா....
கண்ணீர் ஊற்றி என் கல்லறைத்தூக்கம் கலைத்தவளே நில்...
இன்றாவது நான் சொல்வதை பொறுமையாய், முழுமையாய் கேள்...!!
தயவு செய்து...
என் கல்லறையிலாவது,
ஒரு முற்றுப்புள்ளி இட்டு போ..!!
அய்யகோ...!!!
உனக்காய் உயிரை விட்டு,
உன் பிள்ளைக்காய் பெயரையும் விட்டு,
எதிர்வரும் பிறவியிலும்...
என் நினைவு நாளில் மட்டும்,
உன் நினைவில் வாழ வைத்துவிடாதே....!!
இப்படிக்கு,
நானும் நம் காதலும் தூங்கும் கல்லறை.


.jpeg)


