இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!
Showing posts with label வானவில். Show all posts
Showing posts with label வானவில். Show all posts

Thursday, February 11, 2010

படையெடு இன்றே..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, February 11, 2010 1 comment


வானவில் கொடி ஏந்தும்
வானப்படையின் மேகப் போர்வீரனே..
படையெடு இன்றே
பஞ்சத்தின் பாதக ஆட்சி அகற்ற..!

ஆயிரம் படை கண்டேன் - அவர்தம்
ஆயிரம் கொடி கண்டேன்
எவரதும் இல்லை உன்போல்
ஏழு வண்ணத்தில்..!!

உயிர் உறையும் போர்க்களம்
ஆயிரம் கண்டதுண்டு..!
பயிர் விளையும் போர்க்களம் 
உன் களம் மட்டுமே..!
படையெடு இன்றே
பஞ்சத்தின் பாதக ஆட்சி அகற்ற..!