Showing posts with label காதல் தோல்வி. Show all posts
Showing posts with label காதல் தோல்வி. Show all posts
Sunday, November 30, 2014
Friday, June 8, 2012
நீ குளித்த தண்ணீரில்...!!
நீ மட்டும்உம்மென்று..
ஒரு வார்த்தை சொல்..!!
வானத்தை கவிழ்த்தி வைக்கிறேன்...!!
மேகத்தில் நீ மெதுவாய் குளித்திடு...!!
மின்னலை
கொஞ்சம் நிமிர்த்தி வைக்கிறேன்..!!
மெல்ல நீ
சடையில் பின்னிடு....!!
கொஞ்சம் பொறு...!!
நீ குளித்த தண்ணீரில்
நிலவை கொஞ்சம் கழுவி வைக்கிறேன்...!!
நீ முகம் பார்க்கும் அளவுக்கு
அது ஒன்றும் அத்தனை வெளுப்பில்லை...!!!
Tuesday, September 27, 2011
இப்படிக்கு, நானும் நம் காதலும் தூங்கும் கல்லறை.

அடடா அதற்குள் ஒருவருடம் ஆயிற்றா....
கண்ணீர் ஊற்றி என் கல்லறைத்தூக்கம் கலைத்தவளே நில்...
இன்றாவது நான் சொல்வதை பொறுமையாய், முழுமையாய் கேள்...!!
தயவு செய்து...
என் கல்லறையிலாவது,
ஒரு முற்றுப்புள்ளி இட்டு போ..!!
அய்யகோ...!!!
உனக்காய் உயிரை விட்டு,
உன் பிள்ளைக்காய் பெயரையும் விட்டு,
எதிர்வரும் பிறவியிலும்...
என் நினைவு நாளில் மட்டும்,
உன் நினைவில் வாழ வைத்துவிடாதே....!!
இப்படிக்கு,
நானும் நம் காதலும் தூங்கும் கல்லறை.
Sunday, March 28, 2010
இறந்து விட்டேன் அழ யாருமில்லை..!
உயிரும் இல்லை - ஆனால்
ஒருத்தரும் அழவுமில்லை இங்கு
என்னைத் தவிர..!
இத்தனைக்கும் நான் இறந்து விட்டேன்
உன்னை பிரிந்த மறு கணமே..!
கண்ணீர் கொண்டு நித்தம்
அழிக்க பார்க்கிறேன்..
ஆனால்
ஓயாமல் அடம் பிடிக்கிறது
கண்ணீரை உண்டு உயிர் வாழும்
உந்தன் நினைவுகள்..!
இன்றாவது மணம் கமழச் சொல்லேன்
நீ கடைசியாய் பறித்த மலரிடம்...!!
ஒருத்தரும் அழவுமில்லை இங்கு
என்னைத் தவிர..!
இத்தனைக்கும் நான் இறந்து விட்டேன்
உன்னை பிரிந்த மறு கணமே..!
கண்ணீர் கொண்டு நித்தம்
அழிக்க பார்க்கிறேன்..
ஆனால்
ஓயாமல் அடம் பிடிக்கிறது
கண்ணீரை உண்டு உயிர் வாழும்
உந்தன் நினைவுகள்..!
இன்றாவது மணம் கமழச் சொல்லேன்
நீ கடைசியாய் பறித்த மலரிடம்...!!






