இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!
Showing posts with label காதல் தோல்வி. Show all posts
Showing posts with label காதல் தோல்வி. Show all posts

Sunday, November 30, 2014

இது என்ன இலக்கணமோ ??

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, November 30, 2014 No comments


இது என்ன இலக்கணமோ தெரியவில்லை....!!


நீ சொல்லும் போது மட்டும்....


மறந்துவிடு என்பதற்கும்...


 இறந்துவிடு என்பதற்கும்...


 ஒரு வித்தியாசமும் தெரியவில்லை...!!!

Friday, June 8, 2012

நீ குளித்த தண்ணீரில்...!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, June 08, 2012 No comments


நீ மட்டும்
உம்மென்று.. 
ஒரு வார்த்தை சொல்..!!
வானத்தை கவிழ்த்தி வைக்கிறேன்...!!
மேகத்தில் நீ மெதுவாய் குளித்திடு...!!
மின்னலை 
கொஞ்சம் நிமிர்த்தி வைக்கிறேன்..!!
மெல்ல நீ 
சடையில் பின்னிடு....!!
கொஞ்சம் பொறு...!!
நீ குளித்த தண்ணீரில் 
நிலவை கொஞ்சம் கழுவி வைக்கிறேன்...!!
நீ முகம் பார்க்கும் அளவுக்கு 
அது ஒன்றும் அத்தனை வெளுப்பில்லை...!!!

Tuesday, September 27, 2011

இப்படிக்கு, நானும் நம் காதலும் தூங்கும் கல்லறை.

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, September 27, 2011 1 comment






அடடா அதற்குள் ஒருவருடம் ஆயிற்றா....
கண்ணீர் ஊற்றி என் கல்லறைத்தூக்கம் கலைத்தவளே நில்...
இன்றாவது நான் சொல்வதை பொறுமையாய், முழுமையாய் கேள்...!! 
தயவு செய்து... 
என் கல்லறையிலாவது, 
ஒரு முற்றுப்புள்ளி இட்டு போ..!!
அய்யகோ...!!! 
உனக்காய் உயிரை விட்டு, 
உன் பிள்ளைக்காய் பெயரையும் விட்டு, 
எதிர்வரும் பிறவியிலும்...
என் நினைவு நாளில் மட்டும்,
உன் நினைவில் வாழ வைத்துவிடாதே....!!


இப்படிக்கு,
நானும் நம் காதலும் தூங்கும் கல்லறை. 

  



Sunday, March 28, 2010

இறந்து விட்டேன் அழ யாருமில்லை..!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 28, 2010 4 comments

 
உயிரும் இல்லை - ஆனால்
ஒருத்தரும் அழவுமில்லை இங்கு
என்னைத் தவிர..!
இத்தனைக்கும் நான் இறந்து விட்டேன்
உன்னை பிரிந்த மறு கணமே..!
 
கண்ணீர் கொண்டு நித்தம்
அழிக்க பார்க்கிறேன்.. 
ஆனால்
ஓயாமல் அடம் பிடிக்கிறது
கண்ணீரை உண்டு உயிர் வாழும் 
உந்தன் நினைவுகள்..!


இன்றாவது மணம் கமழச் சொல்லேன்
நீ கடைசியாய் பறித்த மலரிடம்...!!

    தண்ணீரில் விழுந்த தாமரை..!!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Sunday, March 28, 2010 6 comments



    தண்ணீரில் தவறி விழுந்த
    தாமரை இதழாய் நித்தம் தவிக்கிறேன்
    ஒட்டி உறவாடவும் இல்லை..
    விட்டு விலகவும் இல்லை..
    முட்டி மோதுகிறேன்,
    உன் நினைவுகளோடு...!!

    Friday, December 11, 2009

    உண்மையாய் ஒரு உண்மை..!

    Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Friday, December 11, 2009 2 comments

    கண்ணே..
    உன்னை காணாத நாட்களில் -
    குருடனாகிறேன்..!
    கண்ட மாத்திரத்தில் கவிஞன் ஆகிறேன்..!


    உன்னை நினைக்காத நாட்களில் -
    நித்திரை இழக்கிறேன்..!
    நினைத்த மாத்திரத்தில் என்னையே இழக்கிறேன்..!


    உன்னுடன் பேசாத நாட்களில் -
    ஊமையாகிறேன்..!
    மறக்கும் நாளில் மரணத்தை மணந்திருப்பேன்..!