Monday, February 15, 2010
Sunday, February 14, 2010
Thursday, February 11, 2010
படையெடு இன்றே..!!
வானப்படையின் மேகப் போர்வீரனே..
படையெடு இன்றே
பஞ்சத்தின் பாதக ஆட்சி அகற்ற..!
ஆயிரம் படை கண்டேன் - அவர்தம்
ஆயிரம் கொடி கண்டேன்
எவரதும் இல்லை உன்போல்
ஏழு வண்ணத்தில்..!!
உயிர் உறையும் போர்க்களம்
ஆயிரம் கண்டதுண்டு..!
பயிர் விளையும் போர்க்களம்
உன் களம் மட்டுமே..!
உன் களம் மட்டுமே..!
படையெடு இன்றே
பஞ்சத்தின் பாதக ஆட்சி அகற்ற..!காதல்..! ஒரு கனவு..!?
காதல் ஒரு கனவு என்கிறார்களே..?
கனவுகள் என்ன கதவை தட்டி விட்டா வருகிறது ..?
காதலும் அப்படித் தானே வருகிறது..!
அப்போ அவர்கள் சொல்வது உண்மை தான்..
ச்சே... ச்சே.. அப்படியெல்லாம் இருக்காது...
அட....
கண்களின் உறக்கத்தில் பிறந்து
மறைவதன்றோ கனவு ..!
கண்களின் நெருக்கத்தில் நுழைந்து
உறைவதன்றோ காதல்..!
அட.. போங்கப்பா...
காதலும் கனவும் வேறு வேறுதான்..!