இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Thursday, February 11, 2010

காதல்..! ஒரு கனவு..!?

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, February 11, 2010 1 comment

காதல் ஒரு கனவு என்கிறார்களே..?
அட.. ஆமாம் ..!
கனவுகள் என்ன கதவை தட்டி விட்டா வருகிறது ..?
காதலும் அப்படித் தானே வருகிறது..!

அப்போ அவர்கள் சொல்வது உண்மை தான்..
ச்சே... ச்சே.. அப்படியெல்லாம் இருக்காது...

அட....
கண்களின் உறக்கத்தில் பிறந்து
மறைவதன்றோ கனவு ..!
ஆனால்
கண்களின் நெருக்கத்தில் நுழைந்து
உறைவதன்றோ காதல்..!

அட.. போங்கப்பா...
காதலும் கனவும் வேறு வேறுதான்..!

1 comments:

//அட....
கண்களின் உறக்கத்தில் பிறந்து
மறைவதன்றோ கனவு ..!
ஆனால்
கண்களின் நெருக்கத்தில் நுழைந்து
உறைவதன்றோ காதல்..!//
marvelous man

Post a Comment