இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!
Showing posts with label தனிமை. Show all posts
Showing posts with label தனிமை. Show all posts

Tuesday, September 27, 2011

இப்படிக்கு, நானும் நம் காதலும் தூங்கும் கல்லறை.

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Tuesday, September 27, 2011 1 comment






அடடா அதற்குள் ஒருவருடம் ஆயிற்றா....
கண்ணீர் ஊற்றி என் கல்லறைத்தூக்கம் கலைத்தவளே நில்...
இன்றாவது நான் சொல்வதை பொறுமையாய், முழுமையாய் கேள்...!! 
தயவு செய்து... 
என் கல்லறையிலாவது, 
ஒரு முற்றுப்புள்ளி இட்டு போ..!!
அய்யகோ...!!! 
உனக்காய் உயிரை விட்டு, 
உன் பிள்ளைக்காய் பெயரையும் விட்டு, 
எதிர்வரும் பிறவியிலும்...
என் நினைவு நாளில் மட்டும்,
உன் நினைவில் வாழ வைத்துவிடாதே....!!


இப்படிக்கு,
நானும் நம் காதலும் தூங்கும் கல்லறை. 

  



Monday, February 15, 2010

நீ இல்லாத குறை..!!

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Monday, February 15, 2010 1 comment

தனிமை தேடி நான் தனித்து நிற்கையில்
ஆளே இல்லாத அறை...
அங்கேயும் நிறைந்தே  நிற்கிறது.. 
நீ இல்லாத குறை..!!

நீ செல்லமாய் தான் கிள்ளி சென்றாய்... 
எனக்கோ மொத்தமாய் இழந்த 
இதயம் போல் வலிக்கிறது
நாளை வரை வரமாட்டாய் எனும் போது..!

Thursday, January 21, 2010

நாளை வரை வரமாட்டாய்

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Thursday, January 21, 2010 1 comment

தனிமை தேடி நான் தனித்து நிற்கையில்
ஆளே இல்லாத அறை... அங்கேயும் நீ இல்லாத குறை நிறைந்தே  நிற்கிறது..
நீ செல்லமாய் தான் கிள்ளி சென்றாய்... 
எனக்கோ மொத்தமாய் இழந்த இதயம் போல் வலிக்கிறது
நாளை வரை வரமாட்டாய் எனும் போது...

நீ சிறிது பேசும் போது நிறுத்தி நிறுத்தி பேச மாட்டாயா என ஏங்குகிறேன்... களைத்து போய் நிறுத்திவிட்டால் என்ன பண்ணுவது...

நாம் பேசுகையில் புற்களை செல்லமாய் தடவி
நீ சிணுங்கும் போது சிதறும் சிரிப்பில் 
மெல்ல நான் பறக்கிறேன் உண்மையில் உன் சொற்களை மறந்து...