இதுவரை நமது தளத்திற்கு வந்து சென்றோர் !!(Total Pageviews)

இந்த கவிதை கொடுமைக்கு யார் காரணம்???

2011-ல் முதல்வர் ஆக ஆசைப்பட்டேன்...ஆனால் அங்கு போட்டி அதிகமாக ஆகிவிட்டதால்,சரி கவிதை எழுதலாம் என ஆசைப்பட்டு, இப்போது எழுதியும் ஆச்சு.....இனி நீங்கள் தான் படித்து பார்த்து கவிதை மாதிரி இருக்கிறதா இல்லை கழுதை மாதிரி இருக்கிறதா என கூறவும்.... கவிதை எனில் இனி நான் கவிஞன்.. கழுதை எனில் இனி நான் கலைஞன்... !!!

Wednesday, September 7, 2011

காலவெள்ளம் கண்டிரா காதல் ஓவியம் காணுங்கள்

Posted by LM - Lakshmanan Muniyandi - yellem85 On Wednesday, September 07, 2011 No comments

சுந்தர சோலைதனில், சந்தன சாதிமுல்லையென..
சுபம் ஆயிரம் சூடிடவந்த 'சுப்புலட்சுமியே'..
தெவிட்டாத தேனமுதாய், வேண்டியதை விரைந்தருளும்..
வெற்றி விநாயகன் வாரி வழங்கிட்ட 'செல்வகுமரனை'..
முன்னோர் ஜென்மத்தின் முழுபயனால் - நீ
வாங்கிவந்திட்ட வரந்தான் உன்தோள் சேர்த்தது..!! - இனி
ஊண் உறக்கம் ஒதுங்கி நின்றிட,
காலவெள்ளம் கண்டிரா காதல் ஓவியம் காணுங்கள்..
கம்பன் வந்து காப்பியமாக்கிடுவான்..!!
நேற்றென்ற மாயைநீக்கி, நாளைதனை நனவாக்கிடும்..
உன்னத கனவோடு ஒப்பற்று வாழுங்கள்..!
வான்புகழ வாழ்ந்தோர் வழிநின்று..!!

0 comments:

Post a Comment