கெட்டி மேளம் முழங்கும் நல்வேளை,
பூவேலியிட்டு மறைத்த மனதை நாளை
பொன்தாலியிட்டு பறைசாற்று ..!!
உனக்காய் பிறந்த முறை மாமன்,
Tamil Kavithai | தமிழ் கவிதைகள்
இடம் மாறிய இதயத்தோடு தினம் கனவில் கதை பேசியும்... பழகிய பாதையிலும் பாதைதவறி, பார்வை தேடிய பாதங்களே!! கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் கவிதை பருகியதும் போதும் - இதோ மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..! பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம் புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் புன்னகை வண்ணம் கொண்டு..! பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!
4 comments:
hey realy nice pa
unga sis marriage ka muni
keep it up
சூப்பர் தம்பி.... வள்ளுவன் வாரிசு என்பதை மணி கொருமுறை நிருபிக்கிறாய்.....
என்னமோ க...க..போ....!!
ஹா.... ஹா
///கெட்டி மேளம் முழங்கும் நல்வேளை,
பூவேலியிட்டு மறைத்த மனதை நாளை
பொன்தாலியிட்டு பறைசாற்று ..!!//
fantastic lines munish
2nd and 3rd lines... i cant understand pa... plz explain....
Post a Comment