கெட்டி மேளம் முழங்கும் நல்வேளை,
பூவேலியிட்டு மறைத்த மனதை நாளை
பொன்தாலியிட்டு பறைசாற்று ..!!
உனக்காய் பிறந்த முறை மாமன்,
இடம் மாறிய இதயத்தோடு தினம் கனவில் கதை பேசியும்... பழகிய பாதையிலும் பாதைதவறி, பார்வை தேடிய பாதங்களே!! கால்வலிக்க காத்திருந்து, கண்ணசைவில் கவிதை பருகியதும் போதும் - இதோ மல்லியும் முல்லையும், மங்கள நாதமொடு நட்பொடு சொந்தமென நாற்திக்கும் நல்வாழ்த்திட..! பூமாலைசூடி புதுமஞ்சள் நாண்முடித்திடு - உம் புதுவாழ்வின் முதல்பக்கமே பூத்திடட்டும், சிந்தனை ஒன்றென நீங்கள் சிந்திடும் புன்னகை வண்ணம் கொண்டு..! பாரதி கம்பனொடு, பார்புகழ் வள்ளுவன் வாக்காய் வாழ்ந்திடுவீர் நீவிர்!
4 comments:
hey realy nice pa
unga sis marriage ka muni
keep it up
சூப்பர் தம்பி.... வள்ளுவன் வாரிசு என்பதை மணி கொருமுறை நிருபிக்கிறாய்.....
என்னமோ க...க..போ....!!
ஹா.... ஹா
///கெட்டி மேளம் முழங்கும் நல்வேளை,
பூவேலியிட்டு மறைத்த மனதை நாளை
பொன்தாலியிட்டு பறைசாற்று ..!!//
fantastic lines munish
2nd and 3rd lines... i cant understand pa... plz explain....
Post a Comment